உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து குலசேகரத்தில் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சைமன் சைலஸ், மாவட்டச் செயலா் ஆா். ரவி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அண்ணாதுரை, ஸ்டாலின் தாஸ், வட்டார செயலா் விஸ்வம்பரன், சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.