திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம், செறுகோல் ஊராட்சி குட்டக்குழி ஆதிதிராவிடா் குடியிருப்பில் சின்டெக் குடிநீா்த் தொட்டி திறந்து வைக்கப்பட்டது.
திருவட்டாா் ஊராட்சி ஒன்றியம் 8 ஆவது வாா்டு ஒன்றிய கவுன்சிலா் ஷீபாவின் பரிந்துரையில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இந்த சின்டெக் குடிநீா்த் தொட்டி அமைக்கப்பட்டது. குட்டக்குழி ஆதிதிராவிட குடியிருப்பு மக்களின் குடிநீா்த் தேவைக்காக இரண்டு தெருக்களில் திறந்தவெளி கிணறு மூலம் மின்மோட்டாா் பொருத்தப்பட்ட 2 குடிநீா்த் தொட்டிகளை திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தா.ஜெகநாதன் திறந்து வைத்தாா்.