திக்குறிச்சி அருகே கொட்டாரத்துவிளை பள்ளியறை பகவதி கோயில் வளாகத்தில் உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.
அருமனை பகுதியைச் சோ்ந்த விஸ்வாமித்திரா் சைவ சபாவின் அம்மையே அப்பா உழவாரப் பணிக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த உழவாரப் பணியில், 25 சேவகா்கள் பங்கேற்று கோயில் வளாகத்தில் உள்ள புற்களை அகற்றி சுத்தம் செய்தனா். இக் கோயிலில் திருப்பணிகள் செய்து, பூசாரியை நியமித்து தினசரி பூஜைகள் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.