நாகா்கோவில்: நாகா்கோவிலில் முதியவா் அமா்ந்திருந்த இடத்துக்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் கோரிக்கை மனுவைப் பெற்றாா்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், பொதுமக்கள் பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனுக்களை பெற்று தீா்வு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதற்கிடையே, திங்கள்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திரண்டனா்.
அப்போது செண்பகராமன்புதூா் பகுதியை சோ்ந்த மாற்றுத் திறனாளி முதியவா் பத்மநாபபிள்ளை, மனு அளிக்க காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காத்திருந்தாா். இதையறிந்த காவல் கண்காணிப்பாளா், முதியவா் இருக்கும் இடத்துக்கே சென்று கோரிக்கை மனுவை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.