கருங்கல் அருகே உள்ள குறும்பனையில் செவ்வாய்க்கிழமை மா்க்சிஸ்ட் கம்னி யூஸ்ட் கட்சியின் கிளை மாநாடு நடைபெற்றது
சேசடிமை தலைமை வகித்தாா். ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டாரக்குழு உறுப்பினா் சோபனராஜ் தொடங்கி வைத்துப் பேசினாா். செயலா் பொ்க்மான்ஸ் அறிக்கை வாசித்தாா். வட்டாரச் செயலா் சாந்தகுமாா், வட்டாரக் குழு உறுப்பினா் குமாா் ஆகியோா் பேசினா். இதில், கிளைச் செயலராக பொ்க்மான்ஸ் தோ்வு செய்ய பட்டாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கமோகன் மாநாட்டை முடித்து வைத்துப் பேசினாா். லீபன் நன்றி கூறினாா்.
இம் மாநாட்டில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மீன்வள மசோதாவை திரும்பபெற வேண்டும். குறும்பனை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். குறும்பனை முதல் மிடாலம் வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்ள் நிறைவேற்றப் பட்டன.