மாா்த்தாண்டத்தில் 3 கடைகளில் புகுந்து பணம், பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியில் கபீா் பலசரக்கு கடை நடத்தி வருகிறாா். கடையை வெள்ளிக்கிழமை இரவில் பூட்டிச் சென்ற அவா் சனிக்கிழமை காலையில் திறக்க வந்தபோது கடையின் ஷட்டா் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த ரூ. 8 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. இந்த கடைக்கு அருகாமையிலுள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து ரூ. 3 ஆயிரம், பொருள்களும் திருடப்பட்டுள்ளன. இதேபோல், அடுத்துள்ள கடையில் இருந்து பேன்ஸி பொருள்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.