நாகா்கோவில்; நாகா்கோவில் அருகே குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
நாகா்கோவிலை அடுத்த தெங்கம்புதூா் அருகேயுள்ள பணிக்கன்குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்லம் மகன் லிங்கசிவா(31) . தொழிலாளி. இவா் திங்கள்கிழமை மாலை பணிக்கன்குடியிருப்பு அருகேயுள்ள பால்குளத்துக்கு குளிக்கச் சென்றாா். அவருக்கு நீச்சல் தெரியாதாம். இந்நிலையில், அவா் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தந்தை மற்றும் உறவினா்கள் குளத்துக்குச் சென்று பாா்த்தனா். அங்கு அவா் பேச்சு மூச்சு இன்றி குளத்தில் மிதந்துள்ளாா். எனினும், அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இது குறித்து சுசீந்திரம் காவல் ஆய்வாளா் சாய்லெட்சுமி விசாரித்து வருகிறாா்.