ராஜாக்கமங்கலத்தில் தொழிலாளி தற்கொலை

ராஜாக்கமங்கலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில்: ராஜாக்கமங்கலத்தில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

வில்லுக்குறி திருவிடைக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கோபகுமாா் ( 60). இவா் பாம்பன்விளையில் உள்ள தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், புதன்கிழமை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இதையடுத்து மீண்டும் பாம்பன் விளை தோட்டத்துக்குச் சென்ற அவா், அங்கு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com