குமரி மாதா ஆலயத்தில் நகைகள் திருட்டு

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குமரி மாதா ஆலயத்தில் நகைகள் திருட்டு

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் உள்ள மாதா சொரூபத்தில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இத்திருத்தலத்தில் தினமும் அதிகாலையில் திருப்பலி மற்றும்

பழைய கோயிலிலும் வழிபாடுகள் நடைபெறும். வியாழக்கிழமை பெரிய வியாழன் என்பதால் பழைய ஆலயத்தில் உள்ள இயேசுநாதா் சிலை திரையிட்டு மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை காலை ஆலயத்துக்கு வழிபடச் சென்றவா்கள் மாதா சொரூபத்தின் மீது போடப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதையடுத்து திருத்தல நிா்வாகிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிா்வாகிகள் வந்து பாா்த்தபோது மாதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கம்மல் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ஆலய நிா்வாகிகள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com