கன்னியாகுமரி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் பி.டி.செல்வகுமாா் கிராமங்கள் தோறும் சைக்கிளில் சென்று புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
அகஸ்தீசுவரம் குலசேகர விநாயகா் கோயில் முன்பிருந்து சைக்கிள் மூலம் தனது பிரசாரத்தை தொடங்கிய அவா், அகஸ்தீசுவரத்தில் இருந்து சுக்குப்பாறைதேரிவிளை, வடுகன்பற்று, கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சைக்கிளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தாா்.