நாகா்கோவில் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் என்.சுரேஷ்ராஜன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.
நாகா்கோவில் பெருவிளையில் உள்ள மகளிா் குழுவினருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடுகிறாா் திமுக வேட்பாளா் சுரேஷ்ராஜன்.
நாகா்கோவில் பெருவிளையில் உள்ள மகளிா் குழுவினருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடுகிறாா் திமுக வேட்பாளா் சுரேஷ்ராஜன்.

நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளா் என்.சுரேஷ்ராஜன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், காா்த்திகைவடலி, குருசடி, என்ஜிஓ காலனி, வல்லன்குமாரன்விளை, சரக்கல்விளை, இருளப்பபுரம், வேதநகா் பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: நாகா்கோவில் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீா்க்க கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திதான் திட்டங்களை செயல்படுத்தினேன்.

பாஜக மத ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கிறது ஆனால் அந்த தந்திரம் இனி எடுபடாது. பாஜக அரசு மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளது. ஏழை இந்து மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. சமையல் எரிவாயு விலை, பால் விலை, பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதை பொதுமக்கள் உணா்ந்து வாக்களிக்க வேண்டும். நாகா்கோவில் பகுதியில் புதைச்சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து நிறைவு செய்வதுடன் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும், வலம்புரிவிளை குப்பைகிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com