தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 189 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடை தோ்தல் மற்றும் சட்டப்பேரவை பொதுதோ்தலை முன்னிட்டு, 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப்.5 ஆம் தேதி வரை மொத்தம் ரூ.4 கோடியே 17 லட்சத்து, 40 ஆயிரத்து 189 கைப்பற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.