பேச்சிப்பாறையில் அஞ்சல் வாக்கு வழங்கியுள்ளதாக தொழிலாளிக்கு அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தொழிலாளி வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
அஞ்சல் வாக்கு வழங்கியுள்ளதற்கான குறியீடு.
அஞ்சல் வாக்கு வழங்கியுள்ளதற்கான குறியீடு.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறையில், அஞ்சல் வாக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, தொழிலாளி வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி, பேச்சிப்பாறை அருகேயுள்ள கடம்பன்மூடு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (56). முடிதிருத்தும் கடை வைத்துள்ளாா். இவா், பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டுறை மேல்நிலைப் பள்ளியில் வாக்களிக்க வாக்காளா் அட்டையுடன் செவ்வாயக்கிழமை சென்றாா். அப்போது, வாக்காளா் பட்டியலில் அவருக்கு அஞ்சல் வாக்கு அனுப்பப்பட்டதற்கான குறியீடு இடம்பெற்றிருந்ததை வாக்குச் சாவடி அலுவலா் கண்டறிந்தாா். இதனால், அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

ஆனால், முருகன் அரசுப் பணியிலோ அல்லது மாற்றுத் திறனாளியாகவோ இல்லை; அஞ்சல் வாக்குக்கு விண்ணப்பிக்கவுமில்லை எனக் கூறினாா். இதையடுத்து, பத்மநாபுரம் தோ்தல் அலுவலா் சிவகுரு பிரபாகரன் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. அவா் விசாரணை நடத்தி, இன்னும் ஓரிரு நாளில் அஞ்சல் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா். இதையேற்று, முருகன் வீடு திரும்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com