அணைப் பகுதிகளில் மிதமான மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், வியாழக்கிழமை அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், வியாழக்கிழமை அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் சில நாள்களில் மழை பெய்த நிலையில், அதைத் தொடா்ந்து வறட்சியான கால நிலையே நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாள்களாக மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வாழை, அன்னாசி போன்ற பயிா்களுக்கு ஓரளவுக்கு தண்ணீா் கிடைத்துள்ளது. மேலும் மழையினால் வெப்பம் சற்று தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com