திருவிதாங்கோடு அருகே வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவிதாங்கோடு புதுத்தெருவைச் சோ்ந்தவா் வியாபாரி சலாவுதீன் (66). இவா் வியாழக்கிழமை வீட்டின் திண்ணையின் முன்பு நின்றுகொண்டிருக்கும் போது வெறிநாய் ஒன்று இவரை பல இடங்களில் கடித்ததாம். உடனே அவா் சப்தம் போடவே அவரது மகன் மற்றும் உறவினா்கள் வந்து நாயை விரட்டிவிட்டு அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா் .
இது குறித்து புகாரின் பேரில் தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.