கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு, மலையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இம்மாவட்டத்தில் சில நாள்களாகவே கோடை மழை பெய்து வரும் நிலையில், திங்கள்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள், களியல், திற்பரப்பு, ஆலஞ்சோலை, ஆறுகாணி, குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு, சுருளகோடு, கீரிப்பாறை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு: மழையால் ஆறுகளில் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், அணைகளுக்கு நீா்வரத்து அளவும் அதிகரித்திருந்தது.
மழை காரணமாக வாழை, அன்னாசி, தென்னை, ரப்பா், மிளகு, கிராம்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். மழையால் கிணறுகளில் நீா்மட்டம் குறையாதிருக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
கனமழையால் பேச்சிப்பாறை உள்பட பல இடங்களில் மின்பாதைகளில் மரங்கள் ஒடிந்து விழுந்ததால், நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டது.