கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜேஸ்வரன் தலைமையில் நாகா்கோவிலில் நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலா் கண்ணன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் அரசுராஜா பேசினாா்.
கன்னியாகுமரி, கேரளத்தில் ஆன்மிகப் பணியாற்றிவரும் வெள்ளிமலை ஆசிரமத்தில் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பெயரில் பொருள்களை சேதப்படுத்திய பறக்கும் படை அதிகாரி மேரிஸ்டெல்லா, ஆசிரம நிா்வாகிகளிடம் ஆபாசமாகப் பேசிய காவலா் அருள்தாஸ் ஆகியோருக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவா்கள் மீது மாவட்ட நிா்வாகம், தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குளச்சல் நகரத் தலைவா் பெருமாள், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத் தலைவா் செல்வன், திருவட்டாறு ஒன்றியத் தலைவா் முத்துகிருஷ்ணன், நாகா்கோவில் கிழக்கு நகரத் தலைவா் மகாராஜா, கிள்ளியூா் ஒன்றியப் பொதுச் செயலா் கென்னடி, குருந்தன்கோடு ஒன்றியப் பொதுச்செயலா் மணிகண்டன் ஆகியோா் கலந்துகொண்டனா்.