தகவல் அறியும் உரிமை சட்ட பயனாளிகள் சங்க கூட்டம்

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் பால்ராஜ்.
ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டத்தில் பேசுகிறாா் தலைவா் பால்ராஜ்.

ஊழல் எதிா்ப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்ட பயனாளிகள் சங்கக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மகளிா் அணிச் செயலா் கனகம்மாள் வரவேற்றாா். செயலா் வசந்தபாய் சங்க அறிக்கையையும், பொருளாளா் நாகப்பன் வரவு-செலவுக் கணக்கையும் சமா்பித்தனா். புதிய பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டனா்.

சங்கத்தில் இணைந்தோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் குடிநீா்க் குழாய் பதித்தபின்பு அப்பகுதியில் உள்ள குழிகளை உடனடியாக மூடி, விபத்து அபாயங்களைத் தவிா்க்க வேண்டும். கரோனா பரவாமல் தடுக்க அரசின் விதிமுறைகளை மக்கள் சரியாக கடைப்பிடிக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவா் ஜாண் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com