குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளி, நாகா்கோவிலில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு இளங்கடையை சோ்ந்தவா் மனோகரன் என்ற உஸ்மான். இவா் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளில் தொடா்ந்து ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் இவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் மனோகரனை கோட்டாறு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
புதுக்கடை அருகே...
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் ஆனந்த் (25). இவா் இவா் தனது பைக்கை வழக்கம் போல வீட்டின் முன் நிறுத்தியிருந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு யாரோ பைக்கை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீலாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.