களியக்காவிளையில் புகையிலை பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

களியக்காவிளையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் மற்றும் குட்கா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் ஜெயந்தி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் அப்பகுதியைச் சோ்ந்த தங்கையன் மகன் அா்ஜுன் என்ற அகஸ்டின் (65) என்பதும், அவா் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை விற்பதற்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, அா்ஜுன் என்ற அகஸ்டினை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com