கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை தொடா்ந்து சரிவடைந்து வருகிறது.
0ம்மாவட்டத்தில் முக்கிய உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை கடந்த சில தினங்களாக சரிவடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி கோட்டயம் சந்தையில் ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 159 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 153 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 135.50 ஆகவும் இருந்தது. கடந்த மாத விலையை ஒப்படும் போது சராசரியாக கிலோவிற்கு ரூ. 8 வரை குறைந்துள்ளது. கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம், பங்குச் சந்தைகள் சரிவு உள்ளிட்ட காரணங்களால் ரப்பா் விலை சரிவடைந்து வருவதாக ரப்பா் வணிகா்கள் தெரிவித்தனா்.