தம்பிக்கு அரிவாள் வெட்டு: அண்ணன் மீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில், தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில், தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (50). இவரது சகோதரா் மோகன்தாஸ் (55). இவா்களிடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு பிரச்னைக்குரிய நிலத்தில் மணிகண்டன் முள்வேலி அமைக்க முயன்றாராம். அப்போது அங்கு வந்த மோகன்தாஸ் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டன், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம்.

அப்பகுதியினா் மோகன்தாஸை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com