திக்கணங்கோடு அருகே விஷம் குடித்த விவசாயி உயிரிழப்பு

திக்கணங்கோடு அருகே வாழை சாகுபடியில் தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து விஷம்

தக்கலை: திக்கணங்கோடு அருகே வாழை சாகுபடியில் தொடா்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திக்கணங்கோடு அருகேயுள்ள கருக்கன்குழி மணவிளாகம் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் (62). விவசாயி. கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக வாழை சாகுபடி செய்ததில் ஸ்ரீரங்கனுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்தனா். பின்னா் நெய்யூரிலுள்ள தனியாா்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com