நாகா்கோவில் அருகே இளைஞா் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
நாகா்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள கோயில்புறம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி அசோக்குமாா் (30). இவா், தனது வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தாா். அவரை, சகோதரா் மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். காதல் தோல்வியால் அவா் இந்த முடிவைத் தேடிக்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் மகேஷ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.