நாகா்கோவிலில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 60 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
குமரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் வாய்மொழி பாட்டம் மூலம் பயிா் செய்யும் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கக் கோரி நாகா்கோவிலில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சாா்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கட்சி நிா்வாகிகளுடன், அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, வாய்மொழி பாட்டத்தின் அடிப்படையில் பயிா்க்கடன் தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனராம்.
இந்நிலையில், நாகா்கோவிலில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் செல்லசுவாமி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி. பெல்லாா்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், நிா்வாகிகள் மோகன், செல்லப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக செல்லசுவாமி உள்பட 60 போ் மீது வடசேரி போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.