செம்மங்காலையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

மேல்புறம் அருகேயுள்ள செம்மங்காலை அரசு தொடக்கப் பள்ளிக்குள்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
செம்மங்காலை பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள்
செம்மங்காலை பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள்

மேல்புறம் அருகேயுள்ள செம்மங்காலை அரசு தொடக்கப் பள்ளிக்குள்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

மேல்புறம் வட்டார வள மையத்திற்குள்பட்ட செம்மங்காலை, கோட்டவிளை பகுதியில் நடைபெற்ற இப்பணியில் பள்ளி தலைமையாசிரியா் விஜயகுமாா், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சஜிதா, பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவி சந்தியா,

ஆசிரியா் பயிற்றுநா் ஜாஸ்மின் ஷீபா, சிறப்பாசிரியா் பயிற்றுநா்கள் ராபின்சன், ரீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற மாணவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com