கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா தலைமையில், அரசுஅலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியினை வெள்ளிக்கிழமை ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) மா.வீராசாமி, (தோ்தல்) நாகராஜன் , குற்றவியல் மேலாளா் சுப்பிரமணியம், உசூா் மேலாளா் கண்ணன், வருவாய்த் துறை மற்றும் ஊராட்சித் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.