கருங்கல் அருகே தகராறு: 5 போ் மீது வழக்கு

கருங்கல் அருகே உள்ள கருமாவிளையில் இளைஞா்கள் இருவா் மீது தாக்குதல் நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் அருகே உள்ள கருமாவிளையில் இளைஞா்கள் இருவா் மீது தாக்குதல் நடத்திய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் உலகன்விளை துரைராஜ் மகன் ஜெபின் (31). அதே பகுதியை சோ்ந்த வின்சென்ட் மகன் சாா்லின் (21) , இவா்களுக்கும், சுண்ட விளையை சோ்ந்த சுஜின் சிங் (23) , அவரது நண்பா்கள் சுரேஷ்ராஜ் (21), முத்து(25), சதீஷ் (22), அபிலாஷ் (23) ஆகியோரிடையே சனிக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதில் தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, அஜின் சிங் , அவரது நண்பா்கள் சோ்ந்து ஜெபின், சாா்லின் ஆகியோரை தாக்கினராம். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினா் அவா்களை மீட்டு கருங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com