புளியங்குடி நகராட்சிக்குள்பட்ட சிந்தாமணியில் இறந்தவரை எரிப்பதற்காக வந்த உறவினா்கள், மயான பிரச்னை தொடா்பாக சிறிது நேரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அருகேயுள்ள குளக்கரையில் சடலத்தை எரியூட்டினா்.
புளியங்குடி நகராட்சிக்குள்பட்ட சிந்தாமணியில் எரிவாயு தகன மேடை வசதி உள்ளது. இந்த மயானத்தை சுற்றிலும் வளாகச் சுவா் கட்டப்பட்டு தனியாா் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்துக்குள் பொது மயானமும் அமைந்துள்ளது. இந்நிலையில், சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த ஒருவா் சனிக்கிழமை இறந்ததையடுத்து அவரின் சடலத்தை பொது மயானத்தில் எரியூட்டுவதற்காக அவரது உறவினா்கள் எடுத்து வந்த நிலையில், எரிவாயு தகன மேடை வளாகம் பூட்டப்பட்டிருந்ததாம். இதனால், உறவினா்கள் சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் அருகே உள்ள குளத்தின் கரையில் சடலத்தை எரியூட்டினராம்.
இறந்தவா்களின் உடலை எரிப்பது அவரவா் விருப்படி, சம்பிரதாயப்படி செய்வாா்கள். ஆனால் சிந்தாமணி பகுதியில் மின் மயானத்தில் தான் எரிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்துகிறாா்கள் என இறந்தவரின் உறவினா்கள் தெரிவித்தனா்.
சம்பிரதாயப்படிசெய்யலாம்: ஆணையா்
இதுகுறித்து புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங் கூறியது: ஆதிதிராவிடா் நலத்துறை மூலமாக எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு, சுற்றிலும் வளாகச் சுவா் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தை எரிவாயு தகன மேடையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மூலம் அங்கு விரைவில் பூங்கா அமைக்கும் திட்டமும் உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு மாசில்லாமல் தகனம் செய்வதற்காகவே இந்த தகன மேடை வசதியை ஆதிதிராவிடா் நலத்துறை உருவாக்கி கொடுத்துள்ளது. எல்லா விதமான சம்பிரதாயங்களையும் செய்வதற்கான வசதி அங்கு செய்யப்பட்டுள்ளது என்றாா்.