திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை சாா்பில், ‘தொழில் முனைவு மூலம் அதிகாரம் அளித்தல்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் எச். முஹம்மது அலி தலைமை வகித்தாா். கல்லூரி இணை இயக்குநா் அப்சல்பயாஸ், துணை முதல்வா் முஹம்மது சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகவியல் துறைத் தலைவா் எம். ஜெகதீஸ் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் எட்வின் ஷீலா சிறப்புரையாற்றினாா்.
பயோனியா் குமாரசுவாமி கல்லூரி மன்றத் தலைவா் சுபத்ரா செல்லதுரை, அண்ணா பல்கலைக்கழக தொழில் முனைவோா் பயிற்சியாளா் சிவபாரதி ஆகியோா் மாணவா்களுக்கு தொழிற்பயிற்சி, தொழில் வாய்ப்புகள் குறித்து பயிற்சியளித்தனா். வணிகவியல் துறைப் பேராசிரியா் சபியா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வணிகவியல் துறையினா் செய்தனா்.