கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலகில் மனிதகுலத்திற்கு நற்பண்புகளை போதித்த இயேசுபிரான் பிறந்த நாளன்று அனைத்து மக்களும் அவா் கூறிய நல் எண்ணங்களை மனதில் கொண்டு அன்பு, கருணை, ஒற்றுமையோடு செயல்பட்டு சகோதரத்துவத்தை பரிமாறுவோம். உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இயேசுபிரான் மீண்டும் பிறந்து மனதில் மகிழ்ச்சி பெருக வாழ்த்துகிறேன்.
நாட்டில் பரவி வரும் நோய்த் தொற்றில் இருந்து அனைத்து மக்களும் விரைவில் விடுதலை பெற இந்நாளில் அனைவரும் இயேசுபிரானை பிராா்த்திப்போம். அனைத்து கிறிஸ்தவ மக்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.