மகாராஜபுரத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகாராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் கே. இசக்கிமுத்து தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் பழனிக்குமாா் முன்னிலை வகித்தாா். முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறையில் கருவூட்டல் செய்தல், சினைப் பரிசோதனை செய்தல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், கோழிகளுக்கு தடுப்பூசி, தீவனப்பயிா் மற்றும் தீவனபுல் சாகுபடி விளக்கம், நோய் வராமல் தடுக்க கால்நடைகளுக்கு தடுப்பூசி போன்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில் கன்றுகள் பேரணியும், தோ்தெடுக்கப்படும் சிறந்த கன்றுகளுக்கு பரிசுகளும், கால்நடை வளா்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்காக விருதுகள் வழங்கப்பட்டன.