பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, சமத்து மக்கள்கட்சி சாா்பில் கருங்கல் ஆட்டோ நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மேற்கு மாவட்ட சமக செயலா் ஷாஜி குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணிச் செயலா் சோபித ராணி முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் ஒன்றியச் செயலா் ஆன்றனி, சுரேஷ்குமாா், ஜெயகுமாா், கரிம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.