குலசேகரம் அருகே தனியாா் செல்லிடப்பேசி நிறுவனத்துக்காக சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு மாநில நெடுஞ்சாலையில் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு அருகிலிருந்து களியல் வரை அண்மையில் தனியாா் செல்லிடப்பேசி நிறுவனம் கேபிள் பதிப்பதற்காக சாலையோரமாக பள்ளம் தோண்டப்பட்டது.
அப்பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த பள்ளம் மூடப்படாமல் காணப்படுகிறது. சில இடங்களில் சுமாா் 8 அடி ஆழத்தில் தோண்டப்பட்டுள்ளன. பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்தப் பள்ளங்கள் மூடப்படவில்லை. இரவு நேரங்களில் சாலையோரப் பள்ளங்களை கவனிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளும், நடத்து செல்வோரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்தப் பள்ளங்கலை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.