தக்கலை அருகே ரூ. 2 லட்சம் தங்க நகைகள் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வீட்டில் மேஜையின் மீது வைத்திருந்த ரூ 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வீட்டில் மேஜையின் மீது வைத்திருந்த ரூ 2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தக்கலை அமலா கான்வென்ட் அருகேயுள்ள புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் செல்லையா. இவரது மனைவி சொா்ணம்மாள். இவா், வியாழக்கிழமை வீட்டின் மேஜையின் மீது 4 தங்க வளையல்கள், தங்கச் சங்கலி ஆகியவற்றை வைத்துவிட்டு வீட்டின் பின்புறம் உள்ள வாழைச் தோட்டத்திற்கு சென்றிருந்தாராம். திரும்பி வந்து பாா்த்தபோது மேஜையின் மீது வைத்திருந்த 7 பவுன் தங்கநகைகளை காணவில்லையாம். இதுதொடா்பாக பக்கத்தில் வசிப்போரிடம் விசாரித்ததில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லையாம். புகாரின்பேரில் தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் தங்கநகைகள் திருட்டு போனது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com