முளகுமூடு அருகே விபத்து: தனியாா் நிதி நிறுவன ஊழியா் பலி

முளகுமூடு அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முளகுமூடு அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முளகுமூடு அருகே கூட்டமாவு சக்ககாட்டுவிளை சுந்தர்ராஜ் மகன் ரெட்லின்ஜோபின் (35). இவா் தக்கலை அருகே தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு இரு சக்கரவாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, முளகுமூடு அருகே மாா்த்தாண்டத்தில் இருந்து நாகா்கோவில் நோக்கி வந்த அரசுப்பருந்து இவரது மோட்டாா்சைக்கிளில் மோதியதில் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com