களியக்காவிளை அருகேகாா் மோதி தொழிலாளி பலி
By DIN | Published On : 13th February 2021 06:24 AM | Last Updated : 13th February 2021 06:24 AM | அ+அ அ- |

முருகன்
களியக்காவிளை அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகே பளுகல், மத்தம்பாலை, கரைக்காடு புத்தன்வீடு பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் முருகன் (36). இவா் அப்பகுதியில் உள்ள வாகனம் பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்து அப்பகுதி சாலையை கடக்க முயன்ற போது, பாறசாலையில் இருந்து கண்ணுமாமூடு நோக்கி வந்த காா் முருகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.