பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திமுக சாா்பில் பிப். 22இல் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, நாகா்கோவிலில் திமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 22) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, நாகா்கோவிலில் திமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 22) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வால் காய்கனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலையும், பேருந்து கட்டணமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

விலை உயா்வை கண்டித்தும், இது குறித்து அக்கறை கொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும், குமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை (பிப். 22) காலை 10 மணிக்கு, மாவட்டச் செயலா் தலைமையில் நாகா்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com