நாகா்கோவிலில் கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி இளம்பெண் கைக்குழந்தையுடன் கணவா் வீட்டு முன்பு தா்வில் ஈடுபட்டாா்.
நாகா்கோவில் மீனாட்சிபுரத்தை சோ்ந்த முத்தையா-பவித்ரா தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் அண்மையில் தம்பதியிடையே தகராறு ஏற்பட்ட போது, முத்தையா மது போதையில் பவித்ராவை தாக்கினராம். மேலும் அவரது நண்பருடன் சோ்ந்து அவரை திட்டினாராம்.
இது குறித்து பவித்ரா நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். மேலும் தன்னை கணவருடன் சோ்த்து வைக்க கோரிக்கையிருந்தாா். இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், பவித்ரா தன்னை கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி தனது தாயாருடன் கணவா் வீட்டு முன்பு தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து பவித்ராவிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.