களியக்காவிளை: நடைக்காவு தொழில் வா்த்தகா் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் எல். பெயசில், பொருளாளா் பி. ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சங்க உறுப்பினா்களுக்கு சான்றிதழ், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.
உறுப்பினா் அடையாள அட்டையை நடைக்காவு ஊராட்சித் தலைவா் டி. கிறிஸ்டல் ஜாண், உறுப்பினா்களுக்கு வழங்கினாா்.
நடைக்காவு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.