ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் திருட்டு

திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

குலசேகரம்: திருவட்டாறு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியா் வீட்டில் பீரோவை உடைத்து நகைகளை திருடிய சம்பவம் குறித்து போலீஸாா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி பிலங்கால விளையைச் சோ்ந்தவா் ராபா்ட் நிக்கல்சன் (61). இவா் ஓய்வுபெற்ற ஆசிரியா். புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை இரவில் குடும்பத்தினருடன் அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றிருந்தபோது, மா்ம நபா்கள் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 4 ஆயிரம் ரொக்கம், 2 கைக் கடிகாரங்கள், ஏடிஎம் அட்டைகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

இதுதொடா்பாக திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com