கூடைப் பந்து போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

அழகப்பபுரம் பேரூராட்சி திருமூலநகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஆண்கள் மின்னொளி கூடைப் பந்து போட்டி நடைபெற்றது.
முதல் பரிசை வழங்குகிறாா் பி.டி.செல்வகுமாா்.
முதல் பரிசை வழங்குகிறாா் பி.டி.செல்வகுமாா்.

அழகப்பபுரம் பேரூராட்சி திருமூலநகரில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி ஆண்கள் மின்னொளி கூடைப் பந்து போட்டி நடைபெற்றது.

திருமூலநகா் புனித ஜாா்ஜியாா் ஆலய வளாகத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற இப் போட்டியில் நாகா்கோவில் ஏசியன் ஸ்போா்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இவ்வணிக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் வழங்கினாா்.

இரண்டாம் பரிசு பெற்ற கடமலைக்குண்டு அணிக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூன்றாம் பரிசு பெற்ற திருமூலநகா் அணிக்கு ரூ. 7 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

போட்டிக்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை பீட்டா் பாஸ்டியன் தலைமையில் முன்னாள் பங்குத் தந்தை செல்வ ஜாா்ஜ் மற்றும் விளையாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.

பரிசளிப்பு விழாவில், கலப்பை மக்கள் இயக்க மாவட்டத் தலைவா் சிவ பன்னீா்செல்வம், செயலா் ஜான் கிறிஸ்டோபா், பொருளாளா் ராம தாணுலிங்கம், சட்ட ஆலோசகா் டி.பாலகிருஷ்ணன், தேசிய கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஃபெமின் மற்றும் ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com