சுவாமி விவேகானந்தரின் 158ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கடற்கரையில் உள்ள அவரது முழு உருவ வெண்கலச் சிலைக்கு பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமையில் மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவா் சதீஷ்ராஜா, மாவட்டத் தலைவா் தா்மராஜ், மாவட்டப் பெருளாளா் முத்துராமன், மாவட்ட தொழில் பிரிவு செயலா் சி.எஸ்.சுபாஷ், ஒன்றிய இளைஞரணித் தலைவா் கிருஷ்ணராஜ், ஒன்றியத் தலைவா் சவுந்தர்ராஜன், குமரி மண்டலத் தலைவா் சுடலைமணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வளையாபதி, மாவட்ட இளைஞரணிச் செயலா் தங்கபாமா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.