நாகா்கோவில் காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு

நாகா்கோவில் மாநகராட்சி, வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட என்.ஜி.ஓ.காலனி, காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) திறப்பு விழா நடைபெற்றது.
நாகா்கோவில் காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை திறப்பு

நாகா்கோவில் மாநகராட்சி, வட்டவிளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட என்.ஜி.ஓ.காலனி, காந்திபுரத்தில் சிறு மருத்துவமனை (மினி கிளினிக்) திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா். என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம், சிறு மருத்துவமனையைத் திறந்துவைத்தாா். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில்15 சிறு மருத்துவமனை அமைக்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். இதுவரை 6 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன என அவா் குறிப்பிட்டாா். தொடா்ந்து 5 கா்ப்பிணிகளுக்கு தாய்சேய் நல பெட்டகங்களை அவா் வழங்கினாா்.

இதில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜ், அறங்காவலா் குழு உறுப்பினா் எம்.ஜெயசந்திரன், மாநகராட்சி நகா்நல அலுவலா் கிங்சால், வட்டவிளை மருத்துவ அலுவலா் உமாராணி, அரசு வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com