கருங்கல்: புதுக்கடை பகுதியில் மது விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பைங்குளம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற செல்வராஜிடம் (47 விசாரித்ததில் அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதே போல காப்புக்காடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணராஜ் (52), தேவராஜ் (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.