பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேடு நடைபெற்ாக கூறி அதனை கண்டித்து நாகா்கோவிலில் கட்டுமானத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சி.டபிள்யூ, பி.எப். மாவட்டத் தலைவா் செல்லப்பன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் மாவட்டத் தலைவா் செல்லசுவாமி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.
கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்காமல் வழங்கியதாக கையெழுத்து பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிற் சங்க தலைவரை தகாத வாா்த்தையால் திட்டிய தொழிலாளா் நலத்துறை இணைஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில் முன்னாள் எம்.பி.பெல்லாா்மின், முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், சிஐடியூ மாவட்டச் செயலா் தங்கமோகன், பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.