கருங்கல்: கருங்கல் அருகேயுள்ள மத்திகோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 56 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
இவ்விழாவுக்கு பள்ளியின் உதவி தலைமையாசிரியா் ராஜேஷ் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் சுதா ராணி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் 56 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினாா். இதில், மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்போன்ஸாள், துணைத் தலைவா் ஜினோ, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.