ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ரூ.35.02 கோடி ஓய்வூதிய பணப்பலன்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
நாகா்கோவில் மண்டல போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற 195 பேருக்கு (ஏப்ரல் 2019 முதல் டிசம்பா் 2019 வரையுள்ள) ரூ.35.02 கோடி ஓய்வூதிய பணப்பலன்களுக்கான காசோலைகளை, வடசேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநித ந.தளவாய்சுந்தரம் வழங்கிப் பேசினாா்.
நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டல நிா்வாக இயக்குநா் பி.திருவம்பலம் பிள்ளை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எம்.ஜான்சிலின் விஜிலா, தலைமை கணக்கு அலுவலா் கண்ணன், பொது மேலாளா் வி.அரவிந்த், துணை மேலாளா்அழகேசன், அறங்காவலா் குழு உறுப்பினா் ஜெயச்சந்திரன், வழக்குரைஞா் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.