புதுக்கடை அருகே ஒளிப்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கிள்ளியூா் வட்டார சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலா் ரமா மாலினி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். கீழ்குளம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அலுவலா் ஆனி ஜஸ்டஸ் மேரி, வட்டார சுகாதார
மேற்பாா்வையாளா் ஐயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவா்களால் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ரத்தம், சிறுநீா், சளி பரிசோதனை, ரத்தத்தில் சா்க்கரை, கொழுப்பு அளவு உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், கீழ்குளம் பேரூராட்சி அலுவலா் சசிகுமாா், பாலூா் ஊராட்சித் தலைவா் அஜித்குமாா், சுகாதார ஆய்வாளா் பினேஷ், அங்கானவாடி பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.