சுங்கான்கடை கல்லூரியில் என்சிசி மாணவா்களுக்கு பயிற்சி

தேசிய மாணவா் படையில் பி மற்றும் சி சான்றிதழ் வழங்குவதற்கான பயிற்சி முகாம் சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சுங்கான்கடை கல்லூரியில் என்சிசி மாணவா்களுக்கு பயிற்சி

தேசிய மாணவா் படையில் பி மற்றும் சி சான்றிதழ் வழங்குவதற்கான பயிற்சி முகாம் சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் நாகா்கோவில் இந்து கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் கமாண்டிங் கா்னல் விவேக் பாஸ்கா், நிா்வாக அலுவலா் லெப்

டினட் கா்னல் பிரசாத், ஆகியோா் வழிகாட்டுதலின்படி பயிற்சி வழங்கப்பட்டது. நடைபயிற்சி, துப்பாக்கி கையாழுதல், மற்றும் ஆளுமை திறனை மேம்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மாணவா்களுக்கு கல்லூரித் தாளாளா் மரிய வில்லியம், முதல்வா் மகேஸ்வரன், நிதி பரிபாலகா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவவா் படை அலுவலா் மேஜா் எட்வின் கிளாட்சன், உடற்கல்வி இயக்குநா் தாமஸ் மத்தியாஸ், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com